8-ம் வகுப்பு (பேய் மழையும் தேவதையும்)
special class சீக்கிரம் விட்டச்சு..
rain coat மறந்து வந்ததால்...
மரத்தடியில் நின்றிருந்தேன்..
எப்போது மழை நிற்கும் என்று..
குடை இருக்கும் தைரியத்தில்
கிளம்பிவிட்டய் நீ..
மழை நிற்கும் என்று காத்திருந்த்தேன்..
நீ வந்து நின்று விட்டாய்..
என் அருகில்
முதல் முறையாய்,
மழை நிற்க கூடதென்று நினைத்தேன்.
நீ பேசத்தொடங்கினாய்...
கடந்து போன பட்டாம் பூச்சி - ஐ பார்த்து,
நீ பிடித்து அடைத்து விடுவித்த
பட்டாம் பூச்சிகள் பற்றியும்..
அடிக்கடி மறந்து போகின்ற
lunch box பற்றியும்..
கடைசியாய், அப்பா அழைத்து சென்ற
சினிமா படம் பற்றியும்..
அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடுகின்ற
உன் வீட்டு டீ.வீ பெட்டி பற்றியும்..
இந்த வார ஒலியும் ஒளியும்-ல்
நீ எதிர் பார்க்கும் பாடல் பற்றியும்..
கடைசியாய்..
பொங்கலுக்கு எடுத்த உனக்கு
பிடித்த மஞ்சள் பாவாடை சட்டையையும்..
"அட டா...
மழை முடிந்தது..
வெறும் தூரல் தான்
கிளம்புவோமா?"
என்றாய்..
உன்னோடு ஒரே குடைகுள்..
முக்கு தெரு வரைக்கும்..
நீ
என்னிடம் பேசிக்கொண்டு வந்தாய்..
நான் எனக்குள் பேசிக்கொண்டு வந்தேன்..
"நேரம் காலாமே தெரியாதா இந்த மழைக்கு.. "
"முக்கு தெருவாவது இன்னும் கொஞ்சம் தூரமாய் இருந்திருக்க கூடதா? "
"என் வீடுக்கு பக்கத்தில் உன் வீடு இருந்திருந்தால் என்னவாம்?"
அது என்னவோ. .
இப்பொழுதெல்லாம்...வேண்டுமென்றே..
rain coat மறந்து வருகிறேன்...school-க்கு
அதே மரத்தடியய் கடக்கிறேன்.
மழையும் வருவதில்லை ..
நீயும் வருவதில்லை..
நண்பர்களுக்கு எல்லாம்
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது...
மொத்ததில்,
பேய் மழையும் ,
என் தேவதையும் இனி
ஒன்றாய் வருவதில்லை போலும்..