Wednesday, March 19, 2008

10th : வழக்கம் போல்..


நீ
எப்பொழுதும் என்னை
விட்டு விட்டு
போய் விடுகின்றாய்.

நீ
அழைத்து போகாவிட்டால்
நான்
தொலைந்து போய் விட
போவதொன்றும் இல்லை..

ஆனால்..
உன்னோடு வந்து செல்வது
வழக்கமான பின்
தனியே போவது என்னவோ
தண்டனை போல் இருக்கிறது..

இருந்தும் ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன்.

ration - கடையில் அரிசிக்காகவும்
theater- வாசலில் டிக்க்ட்காகவும்

காத்திருக்கும் சாமானியர்களை போல்..
உன்னோடு வருவதென்னவோ
நீ
கடைசியாக சொல்லுகின்ற
'டாடா' - வுக்காக.. மட்டுமே...
சரி... சரி.

அதற்காக நாளைக்கு
என்னை பார்த்தவுடனே எல்லாம்
'டாடா' சொல்லதே..

நீ நீயாகவும்
நான் நானகவும் இருப்பதில்
நிறைய சந்தோஷங்கள்
இருப்பதால்..

எப்பொழுதும் போல் நீ விட்டு செல்...
வழக்கம் போல்..

0 Comments:

Post a Comment

<< Home